Tv விவாத நிகழ்ச்சியில் மலையக மக்களை தகாத வார்த்தைகளால் பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா.. அதிரடியாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் செய்த செயல்..!! முஸ்லிம் தமிழ் மக்களை மோத வைக்கும் சதி..!!
இலங்கையில் கடந்த 16ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியும் என பெரும்பான்மை மக்கள் நிரூபித்து இருந்தனர். பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஒருவர் தேர்வானது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை. அதுவும் 10 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளால்.
இதனால் சிறுபான்மை இனமான தமிழ் பேசும் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் தமிழில் பேசும் மக்களான தமிழ் மற்றும் முஸ்லீம்கள் இணைந்து செயற்பட வேண்டும் இல்லாவில்லாவிட்டால் சிறுபான்மையினருக்கான அடக்கு முறைகள் அதிகரிக்கும் என்ற நிலையில் நேற்றைய தினம் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியில் தமிழ் முஸ்லீம் முன்னாள் அமைச்சர்களின் செயற்பாடு விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
பிரபல தொலைகாட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, மனோ கணேஷன், மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதைய ஆளும் கட்சி ஆதரவளரான அதாவுல்லா இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் பற்றி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார்.
இதனை பல முறை மனோ கணேசன் அவர்கள் கண்டித்த போதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதாவுல்லா மக்களை தகாத வார்த்தைகள் கொண்டு பேச பொறுமை இழந்த மனோ கணேசன் முகத்தில் தண்ணீரை வீசி யுள்ளார். மனோ கணேசனின் மேசையில் இருந்த குளிர்ந்த நீரையே அதாவுல்லா மீது கொட்டியுள்ளார். இது முஸ்லிம் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை கெடுக்கும் என அதாவுல்லா நினைத்திருந்து இருக்கலாம் என்பதை உணர்ந்துள்ள முஸ்லீம் மக்கள்
மனோ கணேசனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். எந்த ஒரு இனத்தையும் இழிவாக பேசும் உரிமை யாருக்கும் இல்லை.. அப்படி பேசும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அவன் நல்ல தலைவனும் இல்லை என மனோ கணேசனுக்கு ஆதரபாக களத்தில் இறங்கி உள்ளனர்..!!
What actually happened between #Athaullah and @ManoGanesan?#Minnal #ShakthiTV #AthaMano #lka pic.twitter.com/EHcPVNagie
— Zahran Careem (@zahranc) November 24, 2019