ஆஸ்துமாவால் அவஸ்த்தை படுகின்றீர்களா.!? இதோ ஆஸ்துமா தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு…!
ஆஸ்துமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பாடு படுத்திவிடும் நோய். இது சிலருக்கு பரம்பரை நோயாகவும் சிலருக்கு திடீரென ஏற்படும் நோயாகவும் இருக்கிறது. சூழல் மாசடைதல், சுத்தமான காற்று எம்மால் சுவாசிக்க முடியாமல் போக அசுத்தமான காற்று நுரையீரல் பகுதியை முழுமையாக ஆட்சி செய்ய தொடங்கும் போது எமக்கு சுவாச திணறல் அதாவது மூச்சு விட முடியாமல் தவிப்பு,
ஏற்படுகின்றது. இதற்கான தீர்வினை தான் இன்று பார்க்கப் போகின்றோம். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது முற்றிலும் ஆஸ்துமா பிரச்சை தீர்ந்துவிடும்..! வாங்க தேவையானவற்றை பார்க்கலாம். கரும் துளசி அல்லது வெண் துளசி இலைகள் நான்கு, இஞ்சி சிறிய துண்டு, தேன், வெந்தையம், மற்றும் தண்ணீர்.
முதலில் 250ml நீர் எடுத்துக் கொள்ளுங்கள் அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். அதனுடன்
ஒரு கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைய்யுங்கள். கொதிக்கும் போது துளசி இலைகளை போட்டு மிதமான சூட்டில் வையுங்கள். இப்போது 250ml நீர் 200 ஆக குறைந்து இருக்கும். இப்போது வடியுங்கள். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த இஞ்சியை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது தயாராகி இருக்கும் வடித்த நீர் மிதமான சூடாக இருக்கும்.அதனுடன் ஒரு கரண்டி இஞ்சி சாறு விட்டு மிக்ஸ் செய்யுங்கள். இப்போது சுவைகேற்ப தேன் சேர்ந்து டீ போல் குடியுங்கள். காலை அல்லது மாலை டீ நேரத்தில் ஒரு நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து 20 நாட்கள் குடித்து வர பரம்பரை ஆஸ்த்துமா நோயாக இருந்தாலும் முற்றிலும் தீர்ந்துவிடும்.!