B.H.அப்துல் ஹமீத் அவர்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு..!
அறிவிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்று வரை இருப்பவர், தாய்மொழியான தமிழை பேசும் போது பேறு எந்த மொழியையும் கலக்காமல் இன்று வரை பேசி வரும் தமிழ் பற்றாளர்.
“லலிதாவின் பாட்டுக்கு பாட்டு” என்ற சத்தம் எங்கு கேட்டாலும் நினைவுக்கு வரும் ஒரே முகம் அது அப்துல் ஹமீட் அவர்களுடையது தான். எந்த ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கினாலும் அனைவருக்கும் புரியும் படியான தமிழில் கேட்க அழகாக இருக்கும்.
இவர் தன்னை சோகத்தில் ஆழ்த்திய விடயம் ஒன்றைப் பற்றி மனம் திறந்துள்ளார். 1993 ம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மானின் சர்ச்சை காலம் என்று சொல்லலாம். அவரை எப்படியாவது பேட்டி எடுக்க வேண்டும் என முடிவு செய்து அவரிடம் கேட்ட போது மறுத்துவிட்டார்.
எப்படியோ அவரை பேட்டி எடுக்க சம்மதித்து விட்டோம். கலையகத்தில் என் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அதன் போது அன்று சர்ச்சையாக இருந்த ஜென்டில்மேன் திரைப்பட பாடல்கள் பற்றிக் கேட்டேன். மெளனமாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் இறைவனே அறிவான் என்றார்கள்.
அப்போது அவரது கண்கள் கலங்கி இருந்தது. அவர் விடைப்பெற்ற பின் சில பத்திரிகைகளை எடுத்தும் பார்த்தேன் என் மனம் உடைந்து போனது. ஏ ஆர் ரஹ்மான் பற்றி அருவெருப்பான விமர்சனங்களை எழுதி இருந்தார். என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் அது தான்.
ஆனால் ரஹ்மான் இன்றளவும் மாறவில்லை. அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி இருக்கிறார். அதே அமைதி, பணிவு, அன்று அவரது இசையை அவரை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் இன்று அவரது இசையை ரசிக்கிறார்கள்… என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் B.H. அப்துல் ஹமீட்..!