நீண்ட நாட்களின் பின் வெளியாகி உள்ள நடிகர் பாக்கியராஜ் மகளின் புகைப்படம்.! இவர் தான் அமெரிக்காவில் படித்தவர்.!!
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருபவர் பாக்கியராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது மகனான சாந்தனு திரைப்படங்களில் நடித்து வருவது நாம் அறிந்ததே, அதே போல் பாக்கியராஜின் மகளான சரண்யாவும் நடிகை தான்.
ப்ரித்விராஜுடன் ஜோடி சேர்ந்து பாரிஜாதம் திரைபடத்தில் நடித்தார். அதுவே இறுதி திரைப்படமாக இருந்தது. சரண்யா காதலித்து வந்த இளைஞர் அவரை ஏமாற்றியதால் தற்கொலை முயற்சி செய்தார். மூன்று முறை தற்கொலைக்கு முயன்ற இவரை பெற்றோர் காப்பாற்றியதுடன் அமெரிக்கா அழைத்துச் சென்று கவுன்ஷிலிங் கொடுத்ததுடன் உயர் படிப்பை தொடரவும் வைத்தனர்.
இதனால் மனம் மாறிய சரண்யா காதல் தோல்வியில் இருந்து மீண்டார். ஆனால் இன்று வரை திருமணத்திற்கு நோ சொல்கிறார். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு வந்து தற்போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். நீண்ட நாட்களின் பின் தாய் மற்றும் அண்ணியான கீர்த்தியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.