பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது பைனலிஷ்ட் தேர்வானார்.! இவர் தான் சீசன் 4 மூன்றாவது பைனலிஷ்ட்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சியை விட்டு ஷிவானி வெளியேற்றப் பட்டார். இதனை தொடர்ந்து யார் யார் பைனல் செல்வார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது, ஏற்கனவே நாம் கூறிய படி இருந்தாலும் கமலஹாசன் ஒவ்வொருவராக காப்பாற்றப் பட்டார் என்று அறிவிக்கும் போது சிறு மகிழ்ச்சி இருக்கத் தான் செய்கிறது.
பிக் பாஸ் வீட்டின் முதலாவது பைனலிஷ்ட்டாக சோம் சேகர் டிக்கெட் 2 பினாலே டாஸ்க் வெற்றி பெற்று தேர்வானார். இரண்டாவதாக அதிக வாக்குகள் பெற்றிருந்த ஆரி தேர்வானார். தற்போது மூன்றாவது பைனலிஷ்ட் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டின் கோபக் காரரும் ஆரிக்கு அடிக்கடி போட்டியாக அதிரடி காட்டியவருமான பாலாவை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி பாலா தான் கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தார், கண்டிப்பாக பாலா இல்லாவிட்டால் கண்டெண்ட் இருந்திருக்க வாய்ப்பே இருக்காது, என்ன தான் திட்டி தீர்க்கப் பட்டாலும் பைனல் மேடையில் இருக்கும் தகுதி பாலாக்கு இருந்தது.
பாலா மூன்றாவது பைனலிஷ்ட் ஆனதால் 4th ரியோ 5thரம்யா பாண்டியன். இவற்றை நீங்கள் தொலைகாட்சியில் காண நாளை வரை பொறுத்திருங்கள்.!!