மட்டக்களப்பு மச்சானின் காதல் லீலைகள். மனம் திறந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் மூன்றாவது மனைவி..!!
தமிழ் திரையுலகில் யாராலும் இன்றுவரை மறக்க முடியாத திரை ஆளுமை இயக்குனர் பாலு மகேந்திரா. இவர் 1939 ம் ஆண்டு இலங்கை மட்டக்களப்பு எனும் இடத்தில் பிறந்தார். அதன் பின் சென்னைக்கு வந்து தனது படிப்பை முடித்த பாலு, இலண்டன் யுனிவர்சிட்டியில் சினிமா படிப்பை முடித்தவர் சினிமா துறைக்குள் நுழைந்து ஏராளமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.
இன்று திரையில் ஜொலிக்கும் பல நடிக நடிகைகள் பாலு மகேந்திராவால் அறிமுகப் படுத்தப் பட்டனர். இயக்குனர்களில் சிகரம் என்றழைக்கப்பட்டாலும் இவர் பெண்கள் விடயத்தில் கொஞ்சம் வீக்கானவர். 1963 ஆண்டு அகிலேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்தார், அவருடன் வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கும் போதே நடிகை சோபாவுடன் கிசுகிசுக்கப் பட்டார்.
பாலுமகேந்திராவால் தனது வாழ்க்கையை சோபா முடித்துக் கொண்டார். அதாவது தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் நடிகை மெளனிகாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பின் 2004ம் ஆண்டு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார். மற்றையவர்களை விட மெளனிகாவுடன் அவரது வாழ்க்கை அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது.
பாலு மகேந்திராவுடன் தனது வாழ்க்கை பற்றி பேசியுள்ள மெளனிகா அவருடன் நான் வாழ்ந்த நாட்கள் மிக அழகானவை, அவரை நான் மட்டக்களப்பு மச்சான் என்றே அழைப்பேன். திருமணத்தின் பின் அவர் என்னை சத்தியம் செய்யச் சொல்லி இரண்டு விடயங்களை கூறினார். ஒன்று எதற்காகவும் நடிப்பதை நிறுத்தாதே. அடுத்தது என் மரணத்தின் பின் மறுமணம் செய்துகொள்.
நான் ஒரு சத்தியம் மட்டுமே செய்து கொடுத்தேன் அது தொடர்ந்து நடிப்பேன் என்பது மட்டும் தான். என்னால் அவர் இருந்த இடத்தில் இன்னொருவரை வைக்க முடியாது என விட்டுவிட்டேன். இன்றளவும் என்னால் என் மட்டக்களப்பு மச்சானை மறக்க முடியாமல் இருக்கின்றேன் என கூறியுள்ளார்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.