அரிப்பு, மற்றும் அலர்ஜிக்கு உடனடி மருந்து..! இப்படி செய்து பாருங்கள்..!
வாழைப்பழம் யாருக்கு பிடிக்காது சொல்லுங்கள்.? எல்லோருமே வாழைப்பழம் என்றதும் யம்மீ… என கூறுவது அதில் உள்ள சக்தி தெரிந்து மட்டும் அல்ல அதன் சுவைக்காகவும் தான். வாழை பல வகைகளில் இருந்தாலும் பயன்கள் அனைத்திலும் அதிகம் தான்.
ஏழைகளின் தோழன் என்றழைக்கப்படும் வாழைப்பழத்தை பொதுவாக நாம் உள்ளே இருக்கும் சதையை சாப்பிட்டு விட்டு தோலை வீசி விடுவோம். ஆனால் வாழைப்பழ தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எமது உடலுக்கு ஏற்றுக் கொள்வதில்லை அப்படி சில நேரங்களில் எடுத்துக் கொள்ளும் உணவால் உடலில் அலர்ஜி என்று சொல்லப்படுகின்ற வீக்கம் ஏற்படும் அத்துடன் அரிப்பும் ஏற்படும். இதற்கு தீர்வாக வாழைப்பழ தோல் இருக்கிறது.
வாழைப்பழ தோலை அரிப்பு ஏற்படும் இடங்களில் நன்றாக தேயுங்கள். நொடியில் வீக்கம் குறைவதுடன் அறிப்பும் உடனடியாக நின்றுவிடும்.!கால்களில் முள் குத்திவிட்டால் சிலர் ஊசியை போட்டு குடைந்து புண்ணாக்கி கொள்வார்கள்.
சிலர் என்ன என்னவோ எல்லாம் செய்வார்கள். இதற்காக அவ்வளவு கஸ்ட பட தேவையே இல்லை. வாழைப்பழ தோலை எடுத்து முள் குத்திய இடத்தில் மெதுவாக தேய்த்து விடுங்கள். அதன் பின் முள் குத்திய இடத்தின் அருகில் விரல்களால் அழுத்தம் கொடுங்கள் இப்போது முள் இலகுவாக வெளியே வந்துவிடும்.