முடிவடையப் போகும் பாரதி கண்ணம்மா சீரியல்.!! திடீரென மயங்கி விழுந்த கண்ணம்மா..வைரலாகும் வீடியோ இதோ..!!
சீரியல்களில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல், ஆரம்பத்தில் குடும்பத்தினருடன் பார்க்க முடியுமாக இருந்த இந்த சீரியல் டீஆர்பியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் சில நாட்கள் சென்றதும் சீரியல் வீழ்ச்சியை கண்டது. இதற்கான காரணம் கண்ணம்மா மற்றும் பாரதி பிரிந்தது தான்.
கண்ணம்மாவை சந்தேகப் படும் பாரதி வீட்டை விட்டு விரட்டி விட கண்ணம்மா தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா வில்லியாக பிரிந்திருந்தார். இந்த நிலையில் சீரியல் முடியப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பாரதி தற்போது காதலிக்கும் பரினாவின் உண்மை முகம் பாரதிக்கு தெரிய வருவதுடன் கண்ணம்மா தவறு செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து பாரதி கண்ணம்மாவை மீண்டும் நேசிக்கிறார்.
இதனிடையே காட்சி ஒன்றில் கண்ணம்மா மயங்கி விழ பாரதி தூக்கிச் செல்வது போல் காட்சி எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி பார்க்கையில் கண்ணம்மா பாரதி ஒன்று சேர்ந்து விடுவார்கள் இத்துடன் சீரியல் முடிந்து விடும் என்று கூறப்படுகின்றது.!!