யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து இசைஞானியின் மகள் பவதாரிணியும் தனது பெயரை மாற்றிக் கொண்டார்..! இனி இது தான் அவரது பெயர்…!!
இசைஞானி, இசை கடவுள் என இசை பிரியர்களால் கொண்டாடப் படுபவர் இசைஞானி இளையராஜா. இவரது பாடல் தனிமை உணர்வை நீக்கும். அதாவது தொலைதூர பயணங்களின் போது அருகில் ஒருவர் இருக்கும் உணர்வை இசைஞானியால் மட்டுமே கொடுக்க முடியும். ஆறாத காயங்களுக்கு இசைஞானியின் இசைபோல் மருந்தில்லை என்பார்கள்.
என்ன தான் இசையில் உயரத்தில் இருந்தாலும் இவரது முன்கோபம் இசைஞானியை பல சர்ச்சைகளில் சிக்க வைத்தும் இருக்கிறது. எஸ் பி பி உடனான பிரச்சனை தற்போது தீர்வுக்கு வந்த போதும் இன்னும் ஒரு சில சர்ச்சைகள் இசைஞானி மீது இருக்கத்தான் செய்கிறது.அதில் யுவன் ஷங்கர் ராஜா மதம் மாறி திருமணம் செய்து கொண்டதும் அடங்கும்.
ஆனால் யுவன் சினிமாவின் உச்சத்திற்கு சென்றது மதம் மாறிய பின் தான் என ரசிகர்கள் இன்றளவும் கூறி வருகின்றனர். இது இப்படி இருக்கையில் இசைஞானியின் மகளான பவதாரணி ஆரம்பத்தில் சினிமாவில் நிலையான இடம் பிடித்திருந்த போதும் பின்பு பாடல் வாய்ப்புகளே இல்லாமல் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எண் ஜோதிடரை சந்தித்துள்ளார்.
அவரது அறிவுரைக்கு அமைய தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். இது வரை பவதாரணி என எழுதப் பட்ட அவரது பெயர் தற்போது ” ராஜா பவதாரணி ” என்று மாற்றிக் கொண்டுள்ளார். இனி அவரிடம் பேசுவதாயின் ராஜா பவதாரணி என்று தான் பேச வேண்டுமாம். ஏற்கனவே பலர் தங்கள் பெயர்களை மாற்றி உள்ள நிலையில் பவதாரணியும் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.!