ஒரு முறை மட்டும் தான் என மக்களுக்கு காட்டிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் பல நடக்கும் விடயம். வெளியே வந்த பிக் பாஸ் போட்டியாளர் கூறியுள்ள விடயம்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சி பற்றிய பல சுவாரஸ்யமான விடங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி வருகின்றது. 18 பேருடன் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் வெளியேறி விட்ட நிலையில் தற்போது கடும் போட்டி நிலவி வருகின்றது.
இறுதி வரை போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப் பட்ட மது,ஸ்ருதி, ஐக்கி பெர்ரி, நதியா சங் என சிறந்த போட்டியாளர்கள் வெளியேற்றப் பட்டனர். இந்த நிலையில் வெளியே வந்த ஐக்கி பெர்ரி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பது போல் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட நிகழ்ச்சி இல்லை. அங்கு நாம் விளையாடுவது தான் விளையாட்டு. பொய்யாக யாரும் நடிப்பதில்லை, எல்லோரும் நிஜமாகவே இருக்கின்றனர் என தெரிவித்ததுடன் அங்கு நடக்கும் பல விடயங்கள் விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அன்றாடம் நிகழ்ச்சியில் சில விடயங்கள் மட்டும் தான் வெளியே தெரிய வருகிறது. குறிப்பாக wakeup song ஒரு முறை play செய்வது தான் மக்களுக்கு தெரியும், ஆனால் 4 முறை பிலே செய்வார்கள், ஒரு முறை ப்லே செய்யும் போது நாம் நன்றாக தூங்குவோம், 4 முறை ப்லே ஆனால் தான் எழுந்திருப்போம், இது போல் பல விடயங்கள் நடக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.!!