பிக் பாஸ் வீட்டில் இருந்து சற்று முன்னர் வெளியேற்றப்பட்ட போட்டியாளர். ! இது தான் அதிக வாய்க்கு கிடைத்த தண்டனை என கலாய்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சி போட்டியாளர்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது, இது வரை அமைதியாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ளது,
ஆரம்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது போ நடித்தாலும் தற்போது அவர்களின் உண்மை முகம் வெளியாக தொடங்கியுள்ளது, நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள் தற்போது முழுமையாக மாறிவிட்டர்கள்.
பிரபல தொலைக்காட்சியின் உரிமையாளர் போல் பேசிக்கொண்டிருந்த பிரியங்கா அடுத்தவருக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டம் என நடத்திய உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டினார் கமலஹாசன். அதே போல் மக்கள் எதிர் பார்த்தது போல் பலரது உண்மை முகம் இன்றைய தினம் வெளியேறியது, இம்முறை நாமினேட் ஆனவர்களில் மக்களின் விருப்பம் போல் போட்டியாளர் வெளியேற்றப் பட்டுள்ளார்.
பொதுவாக கண்டெண்ட் கொடுக்கும் நபர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதுகாக்கப் படுவதுண்டு, ஆனால் இம்முறை அபிஷேக் கண்டெண்ட் கொடுத்தும் பிக் பாஸ் குழுவினரால் வெளியேற்றப் பட்டுள்ளார். அபிஷேக் ராஜா வெளியே இருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமலஹாசன் பற்றியும் தவறாக பேசிய நிலையில்,
வீட்டிற்குள் சென்ற பின் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும் ப்ரோமோக்கள் மட்டும் தான் பார்த்து இருக்கிறேன் என பொய் பில்டப் போட்டது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது, அபிஷேக் ராஜா வெளியேற வாய்ப்பு இல்லை என போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் 2வது எலிமினேஷனாக யூடியூப்பர் அபிஷேக் வெளியேற்றப் பட்டுள்ளார். இந்த தகவல் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.!