மிக மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொண்டு 30 நிமிடங்களில் காணாமல் போன மணப்பெண்.! அதிர்ச்சியில் உறைந்து போன மணமகன்.!!
திருமணமாகி 30 நிமிடத்தில் பியூட்டி பார்லர் சென்ற மணமகள் திடீரென காணாமல் போனதால் இரு குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த பேகம் என்ற 20 வயது பெண்ணுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் (22) இளைஞருக்கும் திருமண நிச்சயம் நடந்த நிலையில் மிக பிரமாண்ட முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமண சடங்குகள் முடிந்து உறவினர்கள் விருந்தில் இருந்த போது பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என மணமகனிடமும் பெற்றோரிடமும் கூறியுள்ளார். பெற்றோரிடம் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து தோழி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் காரில் பியூட்டி பார்லர் சென்றுள்ளார். உறவினர்கள் காரில் இருக்க பேகம் மட்டும் பியூட்டி பார்லர் சென்றுள்ளார்.
போனவர் நீண்ட நேரமாகியும் வராததால் தேடி சென்ற போது அங்கு மணமகளை காணவில்லை. தொடர்ந்து தேடியதில் மணமகள் அவரது காதலனுடன் காதலனுடன் ஓடிப்போனது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே சாண்டை மூண்டதுடன் வாக்கு வாதமும் நடந்துள்ளது.
மணமகன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மன்னிப்பு கோரிய மணமகள் குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணை தொடர்பாக பின்பு முடிவு செய்யலாம் என கூறியுள்ளனர். இந்த நிலையில் மணமகளின் காதலன் யார் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்க பொலீஸார் முயற்சி செய்து வருகின்றனர்.!