மட்டக்களப்பு முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்..! தொடர்ந்தும் அச்சத்தில் மக்கள்..!
மட்டகளப்பில் முஸ்லீம் மக்களுக்கு பொலீஸார் அச்சுறுத்தல் விடுப்பதாக அலி ஸாகிர் மெளலானா தெரிவித்துள்ளார். இதனை பொலீஸ் மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின் முஸ்லிம்கள் அனைவரும் தீவிர வாதிகள் என்ற நோக்கில் பார்க்கப் படுகின்ற அதே நேரம்
அரபு மொழி எழுதப் பட்டிருந்தால் அதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிங்களம், தமி, ஆங்கிலம், தவிர்த்து வேறு மொழியும் பெயர்ப் பலகைகளில் எழுத தடை விதித்தார்.
இதனை தொடர்ந்து வாகனங்களில் எழுதப் படும் குர் ஆன் வசங்களுக்கு மட்டக்களப்பு பொலீஸார் தடை விதித்து வருகின்றனர். மட்டக்களப்பில் பெரும்பாலான முஸ்லீம்களின் வாகனங்களில் இருக்கும் ” மாஷா அல்லாஹ்” அல்ஹம்துலில்லாஹ்” மற்றும் துவா” போன்ற வார்த்தைகளை உடனடியா அகற்றுமாறு கூறப் பட்டுள்ளது.
உடனடியாக அகற்ற முடியாதவர்களுக்கு நாள் கொடுக்கப் பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளாக அலி ஸாகிர் மெளலான பொலீஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளதுடன் பொலீஸார் இதனை கடுமையான முறையில் அகற்றச் சொல்வது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.!