பொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி.! கண்ணீர் விட்டு அழுத சோகம்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. ஏற்கனவே வெப் சீரிஸ், சார்ட் பில்ம் என நடித்த அபிராமி பின் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வீட்டிற்குள் சென்றதுமே கவின் மீது காதல் என கூறிய அபிராமி பின் முகெனுடன் சுற்ற ஆரம்பித்தார்.
அப்போது முகென் மீது காதல் வர முகென் தனக்கு காதலி வெளியே இருப்பதாக கூறினார். அடிக்கடி அவரது பெயரை முகென் நிகழ்ச்சியிலும் கூறி இருந்தார். இதனால் அபிராமியின் காதல் ஒரு தலைக் காதலாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து அனைவரும் வெளியே வந்து அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
லொஸ்லியா 3 திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் செரின் தவிர்த்து மற்றைய போட்டியாளர்கள் அனைவருக்கும் சிறிய வாய்ப்புகள் சரி கிடைக்கிறது. அபிராமியும் லொஸ்லியா நடிக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் விஜய் தொலைகாட்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அபிராபி கலந்துகொண்டுள்ளார்.
அதில் அவருடன் நடித்து காட்டிக் கொண்டிருந்த இளைஞர் பிக் பாஸ் வீட்டில் அபிராமி நடந்துகொண்ட முறை சரி இல்லை என கூற கடுப்பான அபிராமி கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு வெளியேறி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.!