பிக் பாஸுக்கு எதிராக நடந்துகொண்ட மதுமிதா..! வீட்டிற்குள் நடந்ததை வெளியிட்ட பிக் பாஸ் எடிட்டர்..!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறியதற்கு ஏராளமான காரணங்கள் வெளியாகி இருந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் மதுமிதா குற்றவாளி இல்லையென கூறிவருகின்றனர். ஆனால் அன்று நிகழ்ச்சியில் நடந்தவை அணைத்தும் நாம் அறிவோம். மதுமிதா தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள இந்த செயலை செய்தார்.
ஹெல்லோ டாஸ்க் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ” சேரனிடம் மதுமிதா வர்ணபகவான் கர்நாடகா காரர் போல அதனால் தான் தமிழ் நாட்டு பக்கம் வருகிறார் இல்லை. காவேரி ஆறு போல என கூறவும் அங்கு வந்த செரின் ஏன் இப்போ தமிழ் நாடு கர்நாடகா என பேசுகிறாய், பிரிவினையை ஏற்படுத்தாதே என்கிறார்.
உடனே மதுமிதா நான் தமிழ் பொண்ணு தமிழ் நாடு பற்றி பேசுவேன், நான் கர்நாடகா வந்தால் பேசு என கத்த ஆரம்பிக்கிறார். இதனால் வீட்டில் உள்ள பலரும் செரினுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் மதுமிதா அவர் சொல்வது தான் சரி என அடம்பிடித்து மாநிலங்கள், மொழி என அவர் பிரச்சனை ஆரம்பித்ததால் பிக் பாஸ் குரல் மதுமிதாவிற்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
இவை எதுவும் எடிட் செய்யப் படாது. இவை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியாது என கூற அதனால் உச்சக் கட்ட கோபத்திற்கு ஆளாகும் மதுமிதா கத்தியை எடுத்து கையை வெட்டி கேமராவிற்கு இரத்தத்தை காட்டுகிறார். இதனால் தான் பிக் பாஸ் மதுமிதாவை வெளியேற்றினார்கள். என பிக் பாஸ் எடிட்டர் மேலும் தெரிவித்துள்ளார்..!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.