” எங்களை தொல்லை செய்கின்றார்கள்,மன உளைச்சலில் உள்ளோம். நாங்கள் விபரீத முடிவு எடுக்க முன் எங்களுக்கு உதவுங்கள் ” நடிகர் டேனியல் பரபரப்பு பதிவு..!!
பிக் பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை , போட்டுக் கொடுத்தல் என இருந்தவர் காமெடி நடிகர் டேனியல். இதனால் ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார். வெளியே சென்றதும் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனை மகிழ்ச்சியாக டானியல் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இன்றைய தினம் தனது குடும்பம் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவருக்கு உதவி தேவை எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டேனியல் தெரிவித்திருப்பதாவது எங்களுக்கு வளசரவாக்கம் கார்ப்பிரேஷன் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலகர்களால் மிகவும் தொல்லை ஏற்பட்டுள்ளது.
எங்களை வீட்டில் இருக்க விடுகிறார்கள் இல்லை, எங்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள், இவர்களால் நாங்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம், இந்த பிரச்சனையில் நாங்கள் விபரீத முடிவு எடுக்கும் முன் எங்களுக்கு உதவுங்கள் என கூறி தமிழக முதல்வர்,
மற்றும் சுகாதார துறை அமைச்சர் இருவரையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார். தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது,இந்த நிலையில் டேனியலை எதனால் கார்ப்பிரேஷன் அலுவலகர்கள் டேனியல் குடும்பத்தை தொல்லை செய்கின்றனர் என தெரியவில்லை..?!