பிக் பாஸ் போட்டியாளரான நடிகையின் கைகளை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் வாதியின் மகன்..! சிசிடிவியில் பதிவானதாக பொலீஸில் புகார்..!!
சிறுமிகள் ஆரம்பித்து 60 வயது கடந்த பின் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பூஜ்ஜியத்தில் உள்ளது. செய்தி தாள்களில் முதல் பக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, இளம் பெண் கற்பழித்து கொலை என செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.
இது தவிர சொந்த வீட்டிற்குள் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லை இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதில் நடிகைகள் அல்லது பிரபலமாமவர்களுக்கு நடந்தால் மட்டும் தெரிய வருவது அவர்களை அனைவரும் அறிந்திருப்பதால் தான். அண்மையில் தெலுங்கு பிக் பாஸ் 2வில் கலந்துகொண்ட பிரபல நடிகை சஞ்சனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.
இரவு நேர பார்ட்டி ஒன்றில் மாடல் சஞ்சனா கலந்துகொண்டுள்ளார். அங்கு வந்த பிரபல அரசியல் வாதியும் மற்றும் முன்னாள் MLAவுமான நந்தீஸ்வர் கவுட் அவர்களின் மகனான ஆஷிஷ் கவுட் சஞ்சனாவை நடனமாட அழைத்துள்ளார். இதற்கு சஞ்சனா மறுத்துள்ளார்.
அதன் பின் சஞ்சனாவை ஆஷிஷ் சீண்டிக் கொண்டிருந்ததால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறயாக இருந்துள்ளார். ஆனால் ஆஷிஷ் விடாமல் சென்றதுடன் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதன் போது ஆஷிஷை தள்ளி விட்டு ஓடிய சஞ்சனா பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சஞ்சனா கூறுகையில் அனைத்தும் சிசிடிவி காட்சியில் இருக்கும் பொலீஸார் அதனை பார்த்தால் புரியும் என கூறியுள்ளார்..!