பிக் பாஸ் குழுவின் திட்டத்தை தகர்த்த பாலாஜி.! அடுத்த வாரம் வெளியேற்றப்பட போகிறாரா.? இதோ விபரம்.!!
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலா டாஸ்கை சொதப்பியதால் லக்ஸரி டாஸ்க் மதிப்பெண்கள் இல்லை என்று பிக் பாஸ் குரல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் பாலாஜி மீது கோபத்தில் இருந்த நிலையில் தற்போது சில விடயங்கள் ரசிகர்களால் பகிரப் பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் ஷிவானியை காதல் வலையில் சிக்க வைத்து டூயட் பாட வைக்க பிக் பாஸ் குழு முயன்றுள்ளது.
ஆனால் ஷிவானிக்கு பாலாஜி மேல் காதல் வரவில்லை. நண்பர்களாகவே பழகி வருகின்றனர். நேற்றைக்கு முன் தினமும் பாலாவை எடுத்தெறிந்து பேசிய ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்கு நான் உங்களுக்காக வரவில்லை. எனக்காகவே நிக்கிறேன். அதே போல் கேப்ரியலாவிடமும் உங்களுக்காக சண்டை போடவில்லை, என் பக்க நியாயத்திற்காகவே சண்டை போட்டேன் என கூறியிருந்தார்.
பிக் பாஸால் ஷிவானி பாலாவை ஜோடி சேர்க்க முடியாமல் போனதால் அடுத்த ஆயுதமாக இவர்கள் எடுத்தது சோ மற்றும் ரம்யா தான். இவர்களை ஜோடி சேர்ப்பதற்காக கணவன் மனைவி என்ற டாஸ்கை ஆரம்பித்தார்கள். அதில் சோம் ரம்யா வெற்றி பெற்றால் காதல் வந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால் அதை பாலாஜி இடையில் புகுந்து கெடுத்துவிட்டார்.
இதனால் பாலாஜி மீதான கோபம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்ததுள்ளது..இப்படியே சென்றால் கண்டிப்பாக பாலாஜி வெளியேற்றப் படுவது உறுதியாகி உள்ளது.