கொரோனா வைரஸ் உயிரை பறித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 பற்றி வெளியான செய்தி.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவடைந்து சில மாதங்கள் ஆன நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் தொடங்க இருந்தது. 5வது சீசனுக்காக செட் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வந்தது. கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் இடை நிறுத்தப் படலாம் என கூறப்பட்ட போதும் அதெல்லாம் இல்ல, நிகழ்ச்சி தொடங்கும் என உறுதியாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் பில்ம்சிட்டியில் செட் அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் திடீரென இடை நிறுத்தப் பட்டுள்ளது. செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனை செய்த போது,
5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டதுடன் ஒன்றாக பணிபுரிந்தவர்களையும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் செட் அமைக்கும் பணிகள் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப் படலாம் அல்லது லேட் ஆகலாம் என கூறப்படுகின்றது.!!