பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப் பட்ட போட்டியாளர்.! திருந்தாத ஜென்மம் என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் வரவாக அமிர், சஞ்சீவ், அபிஷேக் ஆகியோர் உள்ள நிலையில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த மாதிரி விளையாடி வருகின்றனர். அத்துடன் இறுதி போட்டியாளராக வர வேண்டும் என்ற எண்ணம் தற்போது போட்டியாளர்களுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடிகர் கமலஹாசன் ஒவ்வொரு போட்டியாளரையும் வைத்து செய்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து நேரடியாக பிக் பாஸ் செட்டுக்கு சென்ற கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதன் போது தொகுப்பாளினி பிரியங்கா அபிஷேக்கின் கை பொம்மையாக மாறிவிட்டதாக அமிர் கூற அரங்கம் அதிர்ந்தது கை தட்டலால். அது மட்டும் இன்றி அபிஷேக் ராஜா மீண்டும் வீட்டிற்குள் சென்றது மக்களுக்கு பிடிக்கவில்லை, அதனால் அபிஷேக்கை இந்த வாரம் வெளியேற்றி உள்ளனர்.
ஏற்கனவே வெறும் 21 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் வைல்ட் வரவாக பிக் பாஸ் டீம் கொண்டு வந்தது. ஆனால் மீண்டும் சேட்டையுடன் வந்த அபிஷேக்கை மக்கள் வெளியேற்றி விட்டனர். இனி வரும் வாரங்களில் இரட்டை வெளியேற்றம் இருக்கும் என கூறப்படுகின்றது.!!