பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சற்று முன் வெளியேற்றப் பட்ட போட்டியாளர்.! உறுதிபடுத்தப் பட்ட தகவல் இதோ !!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் உறுதியாகி உள்ளது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப் பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் வரவாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா வந்தார்கள். 18 போட்டியாளர்களில் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப் பட்டனர்.
ஒரு முறை ஆஜித் எவிக்ஷனில் வந்த போது அவரது எவிக்ஷன் ப்றீ பாஸை பயன்படுத்தி தப்பினார். இந்த வார நாமினேஷனில் ஆரி, பாலாஜி, அனிதா, சனம்,அர்ச்சனா, சோம், சுரேஷ், ஆகியோர் வந்தார்கள் இவர்களில்.இன்றைய தினம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப் பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் வில்லனாக இருந்த சுரேஷ் சக்ரவர்த்தி அர்ச்சனா வீட்டிற்குள் வந்ததும் அடங்கி போனார். அர்ச்சனாவின் அட்டகாசம் அதிகரித்ததால் அடங்கிப் போன சுரேஷ் தேவையற்ற விடயங்களுக்கு மட்டும் கோபப் பட்டதால் அவரை பெரிதாக யாருக்கும் பிடிக்காமல் போனது என்றும் சொல்லலாம். இதனால் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளார்.
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகப் போகும் குக் வித் கோமாளி பார்ட் 2வில் குக்காக சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் கலந்துகொள்ளப் போவதால் அவரை வெளியேற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.!!