பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனிதா சம்பத் போட்ட முதல் பதிவு.!! வந்தவுடனேயே திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய் தினம் அனிதா சம்பத் வெளியேற்றப் பட்டு விட்டார், அதன் எபிசோட் இன்றைய தினம் ஒளிப்பரப்பாகும், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து எனக்கு பேச இடம் தரவில்லை என கத்திக் கொண்டிருந்த அனிதா பின் சின்ன விடயத்தையும் தூக்கிக் கொண்டு சண்டைக்கு சென்று விடுவார்.
பிக் பாஸ் சீசன் 4ல் அதிக சண்டை போட்டவர் என்றால் அது அனிதா தான். கத்திக் கொண்டே இருக்கும் அனிதாவிற்கு யாருமே கத்த கூடாது, அண்மையில் ஷிவானி கத்திய போது தனக்கு தலை வலி வரும் என்றும், கத்தும் சத்தம் கேட்க கூடாது என்றும் கூறினார்,
ஆனால் அவர் கத்தும் சத்தம் தான் வீட்டில் அதிகமாக இருக்கும், இதனாலோ என்னவோ ரசிகர்களுக்கு அனிதாவை கண்டாலே பிடிக்காமல் போனது, எப்போது அனிதா வெளியேறுவார் என காத்திருந்தனர். இந்த வாரம் வெளியேறிவிட்டார்.
இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஆரி ரசிகர்களுக்கே. வெளியேற்றப் பட்ட அனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் அனைத்திற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மா தாயே வெளியே வந்திட்டியா இது போதும் என கூறி வருகின்றனர்.!!
Thanks for everything ??
— Anitha Sampath (@anithasampath_) December 26, 2020