பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கான திட்டத்தை இறுதி நேரத்தில் மாற்றிய விஜய் டிவி..!! சற்றுமுன் வெளியான தகவல்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு இறுதிக்கு வந்துவிட்டது இன்னும் சில மணித்தியாலங்கள் மட்டுமே மீதமிருக்கிறது வெற்றியாளர் யார் என்ற குழப்பம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசனின் அத்தனை எபிசோட்களும் ஒளிபரப்பாகும் முன் ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது.
குறிப்பாக போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு முதல் நாளே அதாவது சூட்டிங் முடிந்தவுடனேயே தகவல் வெளியாகியது. அதனால் பைனலை வெள்ளிக் கிழமை அதாவது நேற்று சூட் செய்வதற்கு நினைத்திருந்த விஜய் டிவி திட்டத்தை மாற்றியது.
அப்படியானால் இன்று சூட்டிங் முடிந்துவிடும் வெற்றியாளர் தெரிந்துகொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். காரணம் இன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி பைனல் சூட் நடக்கவில்லை. நாளை மூன்று மணி வரை யார் வெற்றியாளர் என்று உறுதியாக கூற முடியாது.
நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பு நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வெளியாவதால் பைனல் தொடர்பாக விஜய் டிவி போட்டு வைத்திருந்த திட்டத்தை மாற்றியுள்ளது. எது எப்படியே நாளை 6 மணிக்கு தொலைக்காட்சி சேனலே வெற்றியாளரை அறிவித்துவிடும்..!