” தஞ்சாவூர் ஆண்கள் இப்படியானவர்கள் “வனிதா மீது பாஜகவினர் பரபரப்பு புகார்..!
ஒட்டுமொத்தமாக சில சர்ச்சை பிரபலங்கள் ஒன்று கூடி வனிதாவை திட்டி தீர்த்து வந்தாலும் தனிக் காட்டு சிங்கமாக நின்று கர்ஜித்து வருகிறார் வனிதா. பீட்டர் பாலை திருமணம் செய்ததில் இருந்து ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வரும் வனிதா அதில் இருந்து பின் வாங்காமல் இருக்கிறார்.
அவர் அவர் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க வனிதா வீட்டில் என்ன நடக்கிறது என்பதே இன்று பலரது தேடுதலாக இருந்து வருகிறது. இன்றைய தினம் வனிதாவை கேவலமாக பேசி மிரட்டல் விட்ட சூர்யா தேவி என்ற பெண் கைது செய்தப் பட்டார். அத்துடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி மீது வனிதா புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் பாஜகவினர் வனிதா மீது புகார் அளித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் வனிதா நேற்றைய தினம் பேட்டி ஒன்றில் தஞ்சாவூர் ஆண்களில் பலருக்கு இரண்டு பொண்டாட்டி தான் என கூறி இருந்தார்.
இதனால் தஞ்சாவூர் மக்கள் வனிதாவிற்கு திட்டி தீர்த்து வந்த நிலையில் பாஜகவினர் தஞ்சாவூர் ஆண்கள் பற்றி வனிதா பேசியது தவறு என்றும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்…!