இதில் சிறிதளவு தொட்டு முகத்தில் வைத்தால் போதும் முகப்பரு, மற்றும் முகத்தில் உள்ள கறுப்பு அடையாளம் முற்றிலும் மாறிவிடும்..!
பெண் என்றால் அழகு அழகு என்றால் பெண்..யார் மறுத்தாலும் இது தான் உண்மை. பெண்கள் இயற்கையில் அழகானவர்கள் தான் சில வேளைகளில் இன்றைய சில செயற்கை உணவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பெண்களின் இயற்கை அழகை அழித்து விடுகின்றது.
இதனால் முகப்பரு, கரும்புள்ளி, முகத்தில் குழி போல் அசிங்கமான அடையாளங்கள் வருவது போன்றவை முகத்தை அசிங்க படுத்துகிறது. அன்றைய பெண்களின் முகத்தில் பரு, கரும்புள்ளிகளை கண்டதே இல்லை என எனது பாட்டி அடிக்கடி கூறுவதை கேட்டுள்ளேன். இன்றைய எம் வாழ்க்கை முறை செயற்கையோடு இணைந்திருப்பதால் தான் இன்று எமக்கு இந்த நிலை
சரி நாம் என்ன தான் செயற்கையோடு இருந்தாலும் எம்மை அழகு படுத்த சில செயற்கை முறைகள் தேவைபடுகின்றது. இன்று கன்னத்தை அசிங்க படுத்தும் குழி போன்ற அடையாளத்திற்கு தீர்வை பார்க்கலாம்.! இதற்கு மூன்று தக்காளிகளை எடுத்து வெட்டிக் கொள்ளுங்கள்.
அதனை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அந்த ஜூஸை அப்படியே பிரிஜ்ஜில் வைத்து ஐஸ் கியூப் போல் தயாரித்துக் கொள்ளுங்கள். இதனை நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் முகத்தில் 2 தொடக்கம் 4 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதனை செய்யும் போதே உங்களுக்கு நல்ல தீர்வு கிடைத்துவிடும்.
இது போல் கற்றாலை ஜெல், ஆரஞ்சு ஜூஸ், வெள்ளரிக்காய், போன்றவற்றிலும் செய்து கொண்டால் முகம் நல்ல நிறத்தை தருவதுடன் முகப்பரு, கரும்புள்ளிகள், போன்றவற்றை நீக்கி புது அழகை தரும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!