4 வயது குழந்தையின் தலையை வெட்டி வீதியில் எடுத்துச் சென்ற ஈவு இரக்கம் அற்ற பெண்.! பொலீஸாருக்கும் மிரட்டல்.!
ரஸ்யாவில் 2016ம் ஆண்டு 4 வயது குழந்தையையின் தலையை வெட்டி வீதியில் எடுத்துச் சென்ற பெண் சிறையில் இருந்து விடுதலையாகப் போவதால் கொல்லப் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரஸ்யாவில் வசித்து வரும் இளம் தம்பதியினரின் குழந்தையை பார்த்துக் கொள்ள பணிப்பெண்ணாக நியமிக்கப் பட்டவர் Bobokulova. 43 வயதான இவர் Anastasia என்ற 4வயது குழந்தையை பார்த்து வந்த நிலையில் திடீரென ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குழந்தையின் தலையை வெட்டி எடுத்ததுடன் வீதியில் தூக்கிச் சென்றார்.
நேரில் பார்த்தவர்கள் பொலீஸாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்த முயன்ற போது தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் வெடிக்க வைத்து விடுவதாகவும் மிரட்டினார். ஆனால் பொலீஸாரின் அதிரடியால் அவர் கைது செய்யப் பட்டார். கைது செய்யும் போது குறித்த பெண் குழந்தையின் தலையை வீசி எறிந்த காட்சி இன்றளவும் மக்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கொலைக்கான காரணம் ரஸ்யா சிரியா மீது குண்டு வீசி சிரியா மக்கள் பலர் இறந்ததே காரணம் என குறித்த பெண் கூறி இருந்தார், இதனை தொடர்ந்து அவர் மன நலம் பாதிக்கப் பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது, சிறையில் அவருக்கான சிகிச்சைகள் இடம்பெற்று வந்தது.
5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் அவருக்கு விடுதலை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.!!