போகி தினத்தில் கையில் இருந்த டாட்டூவை எரித்த வனிதா விஜயகுமார்.! வலியை தாங்கிக் கொண்டது இதற்காக தானாம்.!!
வனிதா விஜயகுமார் இந்த பெயரை கேள்வி படாத யாரும் தமிழ் சினிமாவில் இல்லை என்று சொல்லலாம். தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்த வனிதா குடும்பத்திற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமுமே இல்லாதவர் போல் வாழ்ந்து வருகிறார்.
இதற்கான காரணம் இவரது தொடர் திருமணங்கள் தான். மூன்று முறை திருமணமும் ஒருமுறை லிவிங் டுகெதரும் வாழ்ந்த வனிதா தற்போது மீண்டும் தனியாக வாழ்ந்து வருகிறார். வனிதா இறுதியாக கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் சில மாதம் கூட நிலைக்கவில்லை. ஆனால் இந்த திருமணத்தில் ஏகப்பட்ட குழப்பம் இருந்தது.
பீட்டர் பாலை காதலித்த போது வனிதா அவரது பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டார். சில மாதங்களில் இவர்களின் உறவு முடிந்ததால் போகி தினத்தன்று குறித்த டாட்டூவை வனிதா அழித்துள்ளார். இதனை அழிப்பது மிகவும் கடினமான ஒன்றாம்.
டாட்டூவை அழிக்கும் போது போகியில் பழையவற்றை எரித்துவிட வேண்டும். தேவையில்லாத பழைய விடயங்கள் குப்பை போன்றது, அதனால் தான் வலியை பொறுத்துக் கொண்டு எரிக்கிறேன் என கூறியுள்ளார். இந்த டாட்டூ அழிக்கப் பட்டு அதனை மறைக்க பெரிய டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார்.
கண்ணீர் வரும் அளவிற்கு கையை புண் படுத்திய வனிதாவிடம் மீண்டும் யாருடைய பெயரை சரி டாட்டூ போடுவீர்களா என கேட்ட போது உறுதியான பெயர் கிடைத்தால் போடுவேன், மீண்டும் ஒரு முறை அழிப்பது கடினம் என கூறியுள்ளார்..!!