30 வயதை கடந்த பின் ஆண்களே வாரம் ஒரு முறை இதனை செய்து வாருங்கள். இப்படி செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம்,.!
அழகுபடுத்திக் கொள்வதில் எப்போதும் பெண்கள்தான் முன்னிலையில் நிற்பார்கள். அழகு தொடர்பான விடயங்களில் ஆண்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லைத்தானே. ஆண்களும் அழகில் பெண்களுகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.அந்த வகையில் ஆண்களுக்கு உதவக்கூடிய அழகுக் குறிப்புக்கள் சிலவற்றைத் தற்போது பார்க்கலாம்.
வீட்டிலேயே பேஸ் மாஸ்க்குகளை தயார் செய்வது மிக நல்லது. எலுமிச்சையில் விட்டமின் C உள்ளது, இது உங்களது சருமத்தை சிவப்பாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது. மேலும் இவை இறந்த சரும அடுக்குகளை நீக்குகிறது. எலுமிச்சை சாறானது உங்கள் தோலின் மெலனின் அளவைக் குறைக்கும் திறனுடையது. இந்த பேக்கை தயார் செய்வதற்கு எலுமிச்சை சாற்றுடன் தேனைக் கலக்க வேண்டும். இதனை உங்கள் முகத்தில் தடவ வேண்டும்.
அரை வாழைப்பழத்தை நன்கு மசித்து கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கிருமிகள் நீங்கி பொலிவு பெரும்.
கண் கருவளையம் உள்ள ஆண்கள் கருவளையம் போக வாழைப்பழ தோலின் உள் பகுதியை கண்களுக்கு மேலே ஒரு பத்து நிமிடங்கள் வைக்கவும். அப்படி இல்லை என்றால் தோலின் உள்பகுதியை எடுத்து கண்களுக்கு அடியில் வைத்து மஜாஷ் பண்ணுங்க.
நீங்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன், உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க அதிக தரம் வாய்ந்த கிரீம்களை பயன்படுத்தலாம். நீங்கள் கிரீம்களை வாங்குவதற்கு முன் உங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்து கொள்வது அவசியம்.முகக் கருமை மாறுவதற்கு! கற்றாழை சாற்றை சிறிது பாலுடன் கலந்து முகத்தில் தேய்த்து குளித்தால் சரும வறட்சி மறைந்து முகம் பொழிவாக ஜொலிக்கும். அடுத்தடுத்து சிலருக்கு சருமம் வறட்சியா இருக்கும் ஷேவ் செய்வதால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு அது சிலருக்கு கருமை நிறமா மாறிவிடும்.
மசாஜ் செய்யுங்கள் .சிறிய ஐஸ் கட்டிகளைக் கொண்டு உங்கள் சருமத்தை மசாஜ் செய்யலாம். இவை உங்கள் சருமத்திற்கு இழந்த பொலிவைத் திருப்பி பெற உதவுகிறது. எனவே, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ இதனை முயற்சி செய்து தெளிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறுங்கள்.