பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படும் பிரசவ வலி பற்றி தெரியுமா.!? எங்கு எப்போது எப்படி வலி ஏற்படும் தெரியுமா.!? படித்து பாருங்கள்..!!
“பெண்கள்” மிருதுவானவர்கள் ஆனால் அவர்களுக்கு தான் ஒட்டுமொத்த வலிகளும் வருகிறது. மாதவிடாய்..பிரசவம்.. என பல வலிகளோடு போராட வேண்டி இருக்கிறது. ஆண்களுக்கு இந்த தொல்லை எதுவும் இல்லை. அவர்கள் தான் உலகின் சுதந்திர பறவைகள் இது தான் பெண்களின் எண்ணம். இது உண்மையா.!? இது பற்றி அறிந்து கொள்ளலாம். உண்மையில் பெண்களை விட ஆண்கள் மிருதுவானவர்கள். பெண்களை விட ஆண்களுக்கு வலி அதிகம் என்றால் நம்புவீர்களா.!?
குறித்த வயது வரை படிப்பு, தந்தையை இழந்த மகன் என்றால் அதுவும் இல்லை. படிப்பு முடித்தால் பெண்களுக்கு தண்டச் சோறு, வெட்டி பையன் என்ற பேச்செல்லாம் கிடையாது ஆண்களுக்கு ஆரம்பித்து விடும். அன்று ஆரம்பிக்கும் கொடுமை தன் மகன் வளர்ந்து வேலைக்கு செல்லும் அவரை இருக்கும். அக்காவிற்கு திருமணம், தங்கைக்கு திருமணம், அம்மா அப்பாவிற்கு மாத்திரை.. என ஆரம்பித்து எல்லாம் குறையும் போது மனைவி.
பொதுவாக பெண்கள் வயிற்றில் குழந்தையை சுமப்பதை மட்டுமே உலகம் பார்க்கிறது. ஒரு நேரம் மனைவிக்கு உணவு கொடுக்க முடியாமல் போனால் போதும் உலகம் அவனை அத்தனை கேவலமாக பார்த்துவிடும்.. கருவை சுமக்கும் மனைவிக்காக ஆண்கள் விடும் கண்ணீரை யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை தான்.
அருகில் இருக்கவோ தாங்கிப் பிடிக்கவோ விட்டாலும் அவனது எண்ணம் முழுவதும் அவளை சுற்றியே இருக்கும். மனைவிக்கு பிரசவ வலி.. ஆண்களுக்கு உயிர் போகும் வலி தான். அந்த இடத்தில் குற்ற உணர்வில் ஆண்கள் துடிப்பதை யாராலும் கண்டுகொள்ள முடியாது. என்னால் என் விந்தால் தான் என் மனைவிக்கு இத்தனை வலி என குறுகிப் போவதை எந்த மனைவியாலும் உணர முடியாது.
பெண்ணின் பிரசவ வலிக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் ஆணின் உயிர் போகும் வலிக்கு எதுவும் நடக்காது… குழந்தையின் அழுகுரல் கேட்டதும் தாயின் வலி நின்றுவிடும்.. ஆனால் மனைவியின் புன்னகை பார்க்கும் வரை ஆணின் வலி நிற்பதில்லை. 10 மாதத்தில் பெண் இறக்கி வைக்கும் சுமையை 20 வருடங்களுக்கு மேலாக சுமக்கும் ஆண்களின் வலியை எவரும் கண்டுகொள்வதும் இல்லை உணர்ந்து கொள்வதும் இல்லை..!