மூளையில் ஏன் குழப்பம் ஏற்படுகின்றது.? மூளைக்கு தேவையான சக்தி குறைய என்ன காரணம்.? எப்படி இதனை சரி செய்வது.? இதோ முழு விபரம்..!!
காலையில் தான் கட்டாயம் உணவு உண்ண வேண்டும். காலை உணவை சாப்பிடாமல் விட்டால், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைந்து, மூளையை அழிக்கிறது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்ளையும், சக்தியையும் கொடுக்கமல் தடுப்பது தான் காரணம்.
மூளையின் சக்தி குறைவுக்கு காரணம், மிக அதிகமா சாப்பிடுவது. ஏனெனில் இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்களை இறுகச்செய்கிறது. மிக அதிகமா சாப்பிடக் கூடாது.புகைப்பிடிப்பதால் மூளை சுருக்கமடைய வைக்கிறது.. இதனால் வியாதி வரக்கூடாதெனின் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்க வேண்டும். அதற்கு மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க கூடாது. சுவாசிப்பதால் மூளைக்கு ஆக்ஸிசன்களை செல்லவிடாமல் தடைசெய்கிறது.மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கக்கூடாது.
எப்போதும் நன்றாக தூங்க வேண்டும். நன்றாக தூங்கினால் தான் மூளைக்கு அமைதி கிடைக்கும். தினமும் போதிய நேரம் தூங்காவிடின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.பொதுவாக சிலருக்கு தலையை மூடி தூங்கும் பழக்கம் இருக்கும். இப்படி போர்வைக்குள் தூங்கும் போது, நாம் சுவாசிக்கும் ஆக்ஸியனை குறைவடையவைக்கிறது. இதனால் மூளை பாதிப்படையும்.
நம் உடலுக்கு நோய் வந்தால், அந்த நேரத்தில் மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுத்தால், மூளை பாதிப்படையும். நோய் ஏற்பட்டால், எந்த வேலையும் செய்யாதீர்கள்.
மூளைக்கு புதுப்புது விடயங்களை போடவேண்டும்.
சிந்தனைகளும் வேலைகளும் கொடுக்காமல் விட்டால் மூளை வலிமை இல்லாமல், போய்விடும். புதிய வேலைகளை செய்யும் போது தான் மூளை வலிமையாக மாறும்.எப்போதும் மூளை வலிமையோடு இருக்க நல்ல உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும். நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.