நீச்சல் குளத்தில் இருந்த 9 வயது சிறுமியை காப்பாற்ற சென்ற தந்தை மற்றும் சகோதரன்… தாய் கண்முன்னே மூவரும் நீரில் மூழ்கி பலி..!!
ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள், தாய் கண்முன்னே நீரில் மூழ்கி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகிய நன்கு பெரும் சுற்றுலாவிற்காக ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். ஸ்பெயின் கோஸ்டா டெல் சோலில் உள்ள கிளப் லா கோஸ்டா வேல்டு ரிசார்ட் நீச்சல் குளத்தில் இளைய குழந்தை 9 வயதுடைய சிறுமி ஒருவர் சிக்கலில் சிக்கியதும், அவளது தந்தையும், முத்த சகோதரனும் அவளை மீட்க நீச்சல் குளத்தில் குதித்ததுள்ளனர். அதில் தாய் கண்முன்னே மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 52 வயதுடைய தந்தையும், 16 வயதுடைய சிறுவனும், 9 வயதுடைய சிறுமியும் என்று கூறப்படுகிறது. அதில் தந்தையும் மகளும் பிரித்தானியர்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மூத்த பையன் ஒரு அமெரிக்க பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எச்சரிக்கை எழுப்பிய தாயிடமும் பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர். பொலிஸ் டைவர்ஸ் பம்ப் உள்ளிட்ட நீச்சல் குளத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த ரிசார்ட்டில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முமுதல் தடவை என்பது நினைவு கூறப்படுகிறது.