” வீட்டு சுவர்களில் ஆண்களின் பிறப்பு உறுப்பின் அடையாளம்” இனவெறி தாக்குதலுக்கு உள்ளான இந்திய குடும்பம்..!!
கனடாவில் இந்திய தம்பதிகளின் வீட்டில் இனவெறி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் பிறந்து கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் ஜோடி ரமேஷ் மற்றும் கிரண்லேகி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் வெளியே வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் ரமேஷ் மற்றும் கிரண் லேகி உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் ஜன்னல்களை கற்களால் அடித்து சிலர் உடைத்தனர். அதிர்ந்து போன ரமேஷ் உடனடியாக அவசர பொலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு பொலீஸார் வரும் முன் கும்பல் குறித்த இடத்தை விட்டு சென்றதுடன் வீட்டின் சுவர்களில் தேவையில்லாத பலவற்றை கிறுக்கி உள்ளனர். இனவெறி தாக்குதலை குறிக்கும் சுவஸ்த்திகா முத்திரை சுவரில் வரையப் பட்டிருந்ததுடன் ஆண் குறி போன்ற புகைப்படம் வரையப் பட்டிருந்தது.
அத்துடன் கெட்ட வார்த்தைகளும் சுவரில் சித்திரம் போல் வரையப் பட்டிருந்ததுடன் வீட்டை விட்டு செல்லும் படியும் வாசகங்கள் பதிவிடப் பட்டிருந்தது. குறித்த சம்பவம் பற்றி தெரிந்துகொண்ட ரமேஷின் மகன் அவற்றை வீடியோவாக பதிவிட்டதுடன் இனத்தின் மதத்தின் பெயரால் தாக்கப்படும் கொடுமைகள் எல்லா இடங்களிலும் நடக்கிறது என தெரிவித்துள்ளார்..!!
Another example of the psychological terror and uncertainty people of colour have to live with. Who do the racists hate the most this month? https://t.co/mTA7avKKzm
— JJ LaBorde (@torontojj) July 15, 2020
THREAD: This is Shivali Lekhi. She saves lives at BC Children’s Hospital as a respiratory therapist.
This morning, she drove with her brothers for hours to their family home to find broken windows and this graffiti. Their parents were alone last night when this happened. pic.twitter.com/HamXo5eFOG
— Joanna Chiu 趙淇欣 (@joannachiu) July 14, 2020