தமிழில் தைப்பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த கனடா பிரதமர்!
தமிழர் திருநாளான தைப் பொங்கல், நேற்று உலகம் பூராகவும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத தெரிவித்துள்ளனர்.
அதன்படி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர், தனது சிறு உரையின் ஆரம்பத்தில் தமிழில் வணக்கம் சொன்னதுடன், இறுதியில் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் என்றும் கூறினார்.
அவர் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த வீடியோ தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Iniya Thai Pongal Nalvazhthukkal! Wishing everyone celebrating a joyful festival and a happy Tamil Heritage Month. https://t.co/77gxtVscyO pic.twitter.com/qoJGmMjRB0
— Justin Trudeau (@JustinTrudeau) January 15, 2020