வாடகை காரில் பயணம் செய்த கணவன் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வாகன சாரதி..! வீடியோ இணைப்பு..!!
அனைத்தும் எமக்கு மட்டுமே தெரியும் என நடந்து கொள்ளாமல் மற்றவர்களுக்கும் சில விடயங்கள் தெரியும் என்பதை புரிந்து கொண்டால் ஆபத்துகளில் தப்பித்துக் கொள்ளாம் என்பது இன்று நாம் பார்க்கப் போகும் வீடியோவும் ஒரு சாட்சி தான். கணவன் மனைவி இருவரும் வாடகை கார் ஒன்றில் விடுமுறை கொண்டாட செல்கின்றனர்.
காரின் ட்ரைவர் வாகனத்தில் ஏறியதில் இருந்தே எங்கே வேலை செய்கிறீர்கள்,? எவ்வளவு சம்பளம் என கணவன் மனைவி இருவரிடமும் கேட்கிறார். இரவு வேலையில் செல்கின்ற பயணம் என்பதால் கணவன் மனைவி இருவருமே கவனமாக பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் திடீரென காரின் முன் யாரோ விழுந்து விபத்துக்குள்ளாகி உதவி கோருகின்றனர்.
ஆனால் கார் ட்ரைவரோ அவர்களை கண்டுகொள்ளாமல் செல்கிறார், குழந்தையுடன் தெருவில் பெண் ஒருவர் உதவி கோரியும் கண்டுகொள்ளாமல் செல்லும் ட்ரைவரை கடித்துக் கொள்கின்றனர் தம்பதியினர். யாரும் இல்லாத காட்டுபிரதேசத்தை தாண்டிக் கொண்டிருக்கும் போது பறவைகள் போல் ஏதோ கண்ணாடியில் பட அதனையும் கண்டுகொள்ளாமல் சாரதியோ வேகமாக பயணிக்கிறார்.
என்ன மிருகத்தனமான செயல் என கணவர் மனைவி இருவருமே பயத்தில் உறைந்து போய் இருக்க மக்கள் நடமாடும் இடத்திற்கு அழைத்து சென்று விடுகிறார். அதன் போது கணவன் மனைவி இருவரும் பொலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வாகன சாரதியை கூப்பிட்டு விசாரணை செய்த பொலீஸார் அதிர்ந்துள்ளனர்.
காரணம் கொள்ளைக் கார கும்பல் இரண்டிடம் இருந்து இவர்களை குறித்த சாரதி காப்பாற்றி உள்ளார், ஒரு இடத்தில் குழந்தையை காட்டி கொள்ளையடிக்கும் கும்பல் அடுத்த இடத்தில் கார் மீது முட்டையை வீசி அடித்து சேதப் படுத்தி இருந்தனர். இதனை கண்டுகொள்ளாமல் சாரதி பயணம் செய்ததால் உங்கள் உயிர் தப்பியது என பொலீஸார் தெரிவித்துள்ளனர்..!/
Video Copyrights & Credits Owned by :24X7 CINI NEWS