சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முதல் அதிரடியை காட்டியது சிபிஐ. சாத்தான்குள காவர்களின் அத்துமீறல்கள் வெளியானது..!!
அண்மையில் இந்தியாவை மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர வைத்த சம்பவம் தான் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம். சம்பவ தினத்தன்று 8 மணிக்கு மூட வேண்டிய கடையை .7.55 க்கு மூடிய போதும் கடை மூட தாமதமாகியதாக குற்றம் சுமத்தப் பட்ட நிலையில் ஜெயராஜை பொலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தந்தையை மீட்க பொலீஸ் நிலையம் சென்ற மகன் பென்னிக்ஸையும் கைது செய்த பொலீஸார் இருவரையும் அடித்து உதைத்து கொடுமை செய்த நிலையில் சிறையிலேயே பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணமடைந்தனர். இதனால் இவர்களை பொலீஸார் அடித்து துன்புறுத்தியதில் தான் இந்த மரணம் நடந்தது என மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இந்த வழக்கு விசாரணை பொலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது.
அதன் பின் இந்த வழக்கின் முக்கிய விசாரணைகள் முடிந்த நிலையில் தற்போது சிபிஐ பொறுப்பு ஏற்று விசாரணை செய்து வருகிறது. இது வரையில் இந்த மரணம் கொலை என உறுதி செய்யப் படாத நிலையில் இன்றைய தினம் கொலை வழக்கு என சிபிஐ பதிவு செய்துள்ளது.
இதன் படி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் பொலீஸாரார் அடித்து கொலை செய்யப் பட்டது தற்போது உறுதி செய்யப் பட்டுள்ளது..!!