யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுத சாண்டி… எதற்காக தெரியுமா.? இதோ டிவியில் வராத காட்சி..!!
பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் சாண்டி. டான்ஸராக விஜய் டிவியால் அறிமுகப் படுத்தப் பட்ட சாண்டி பின் டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தார். திரைப்படங்கள் பலவற்றில் பணியாற்றிய சாண்டிக்கு முதல் திருமணம் அத்தனை நல்லதாக அமையவில்லை. அப்போது தொகுப்பாளினியாக இருந்த காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்துகொண்ட சாண்டி சில வருடங்களில் அவரை பிரிந்தார்.
!Advert!
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணமாக அமைந்தது. அதன் பின் மறுமணம் செய்துகொண்ட சாண்டிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிந்த சாண்டி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
வீட்டிற்குள் நடனம் மட்டும் இன்றி பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருகின்றார். இந்த நிலையில் சாண்டியின் பிறந்த நாள் அன்று அவரது மகளின் வீடியோ போட்டு காட்டப் பட்டதுடன் புகைப்படமும் கொடுக்கப் பட்டுள்ளது.
!Advert!
வீட்டிற்குள் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சாண்டி யாருக்கும் தெரியாமல் தனிமையில் தனது மகளின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இவை நிகழ்ச்சியில் வரவில்லை ஆனால் சாண்டி ஆர்மியினரின் கையில் சிக்கியுள்ளது. தாயின் அன்பை விட தந்தையின் அன்பு வலிமையானது என்பதற்கு சாண்டியின் இந்த கண்ணீர் போதுமானது..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.