சிக்கிய சிசிடிவி காட்சிகள்.! பென்னிக்ஸின் பிறப்பு உறுப்பில் மிதித்த பொலீஸார்..! சாத்தான்குள காவலர்களின் அராஜகம்..!!
” சாத்தான்குளம்” இரட்டை கொலை சம்பவம் தற்போது உலகம் முழுவதை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்றால் இதற்கு முக்கிய காரணம் பெண் காவலர் ரேவதி தான். சாதாரண குடும்பத்தில் பிறந்து காவல் துறையை நேசித்து முறைப்படி பயிற்சி முடித்து காவல் துறை அதிகாரியாக பணி புரிகிறார் ரேவதி.
ரேவதிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பல காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். சாத்தான்குளத்தில் நடந்த இரட்டை கொலைகள் பற்றி ரேவதி கொடுத்துள்ள வாக்கு மூலத்தில்..
சம்பவ தினத்தன்று இரவு பணி எனது என்பதால் காவல் நிலையத்தில் இருந்தேன், இதன் போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை என்கிற போர்வையில் ஆரம்பத்தில் வழமை போல் அடித்தார்கள். ஆனால் ஸ்ரீதர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோரை தூண்டி விட ஆரம்பிக்க மிருகம் போல் அடிக்க ஆரம்பித்தார்கள்.
என்னால் எதுவும் பேச முடியாமல் இருந்தேன், அடி வாங்கியவர்களும் அடித்தவர்களும் சோர்ந்து போனதுடன் டீ ஆர்டர் செய்தார்கள். நான் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் டீ கொடுத்தேன், ஆனால் ஸ்ரீதர் அவர்களின் டீயை தட்டி விட்டார். அதன் பின் முருகன் அவர்களின் ஆடையை மாற்றினார்.
அதன் பின் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் பென்னிக்ஸின் பிறப்பு உறுப்பில் சப்பாத்து காலால் மிதித்தார்கள். ஜெயராஜ் இதை பார்த்து துடித்தார். இதனால் இருவரையும் தாக்கினார்கள் என குறிப்பிட்டுள்ளார். தற்போது காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும் கிடைத்திருப்பதால் இந்த கொலை எப்படி நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது..!!