சமூகவலைதளங்களைக் கலக்கும் புதிய சலஞ்ச்!
சலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அவற்றை ட்ரெண்ட் செய்வதுதான் தற்கால, இளைஞர் – யுவதிகளின் பொழுதுபோக்காகிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சூடு பிடித்துள்ள இந்த சலஞ்ச் வரிசையில், தற்போது இணைந்துள்ளது #cerealchallenge.
இந்த வருடத்தின் முதல் சவாலாக வைரலாகி வருகின்றது #cerealchallenge.
நாம் காலையுணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கோர்ண்பிளக்ஸை வைத்து இந்தச் சவால் பரவிவருகிறது.
வாயில் பாலை ஊற்றி கோர்ண்பிளக்ஸைப் போடுவிட்டு விட்டு, அதை வேறொருவர் தேக்கரண்டியால் அள்ளிச் சாப்பிடவேண்டும். இதுதான் தற்போது ட்ரெண்டாகிவருகிறது.