8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த உறவினர்கள்.!! வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்த கொடூரம்..!! இந்தியாவில் தொடரும் அட்டூழியங்கள்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது குழந்தையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் பெற்ற தந்தையிடமே குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ் நிலையில் நெருங்கிய உறவினர் ஒருவர் மற்றும் அவரது நண்பர்களால் குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப் பட்டுள்ளார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்ததுடன் கிராம மக்களுடன் இணைந்து தேடியுள்ளனர். அருகில் எங்கும் இல்லாததால் பொலீஸாரின் உதவியுடன் ஆற்றின் அருகே சென்றுள்ளனர். அங்கே சிறுமியின் ஆடை கிழிந்த நிலையில் இருந்ததை தொடர்ந்து அதிர்ந்த பெற்றோரும் பொலீஸாரும் தேடிய நிலையில் உடல் முழுவதும் மிக மோசமாக சேதப் படுத்தப் பட்ட நிலையில் குழந்தையின் உடல் மீட்கப் பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது,
மருத்துவ பரிசோதனையில் குழந்தை ஒன்றுக்கு மேட்பட்டவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது தெரியவந்ததை தொடர்ந்து பொலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையை நெருங்கிய ஒருவர் அழைத்து சென்றதை கண்ணால் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்து பொலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையை நண்பர்களுடன் சேர்த்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஏற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி அழகாக இருந்ததால் அவர் மீது ஆசை இருந்ததாகவும், விளையாட செல்லலாம் என கேட்ட போது சிறுமி வந்தாகவும் அதனால் நண்பர்களுடன் இணைத்து பாலியல் பாலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். வலி தாங்காமல் சிறுமி இறந்ததால் ஆற்றின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த நபரை சிறையில் அடைத்ததுடன் நண்பர்களை தேடி வருகின்றனர்..!!