16 வயது சிறுமியை மூன்று நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த Bank மேனேஜர்.! நல்லவர் போல் நடித்து உதவிய தோழி.!!
இந்தியாவில் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் வங்கி மேனேஜரால் 16 வயது சிறுமி மூன்று நாட்கள் தொடர்ந்து கற்பழிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகுதியை சேர்ந்தவர் பவிந்தர் சிங். இவர் குறித்த பகுதியில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகளுடன் நட்பாக பழகிய பவிந்தருக்கு அவரது தோழியான 16 வயது சிறுமி மீதி ஆசை வந்துள்ளது. தனது ஆசையை தனது நட்பிடம் கூறியதை தொடர்ந்து உதவும் படி கேட்டுள்ளார்.
பள்ளி படிப்புக்கு கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த குறித்த ஏழை சிறுமி அடுத்து கல்லூரி படிப்பு என்பதால் வங்கிக் கடன் பற்றி தோழியிடம் பேசியதை சாட்டாக வைத்து பேங் மேனேஜர் கடன் தருவார் என அறிமுகப் படுத்தினார். முதலில் மேனேஜர் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு அழைப்பை ஏற்படுத்தி பேசியுள்ளார். பின் சிறுமியின் சூழ்நிலையை பயன்படுத்து அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து கவர்ந்துள்ளார்.
அதன் பின் வேலைக்கார பெண்ணின் மகளின் உதவியுடன் சிறுமியின் பெற்றோரிடம் டூர் செல்வதாக பொய் கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று மூன்று நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் வீடியோ எடுத்துள்ளார். வெளியே சொல்ல கூடாதென குறித்த வீடியோவை வைத்து மிரட்டியதுடன் தனக்கு தேவைப்படும் போது சிறுமியை பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக தற்கொலை செய்ய முடிவெடுத்த சிறுமி தனது நெருங்கிய ஆசிரியரிடம் தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளார். உடனடியாக செயற்பட்ட ஆசிரியர் சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டு தெதிந்துகொண்டு அவரது பெற்றோரின் உதவியுடன் பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் பவிந்தர் சிங்கையும் அவருக்கு உதவிய பெண்ணையும் பொலீஸார் கைது செய்துள்ளனர்.!!