பாலியல் துஷ்பிரயோகத்தின் உச்சம்..! 14 & 15 வயது சிறுவர்கள் கைது…!
சர்வதேச ரீதியில் சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வுக் கொடுமைகள் நாளொரு மேனியும் பொழுதோரு வண்ணமுமாக அதிகரித்துககொண்டுள்ள நிலமையில்
இலங்கையில் இம்மாதம் மட்டும் 03க்கும் மேற்படாட சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இம்முறை மாங்கேனி (மட்டக்களப்பு) பகுதியை சேர்ந்த 12 சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையே இதற்கு காரணமானவர்களும் 14 & 15 வயதுடைய சிறுவர்களுமே என்பது சற்று ஆச்சரியத்தையும் மன வேதனையும் அளிக்கின்றது.
இச்சிறுமியை இவ்விரு சிறுவர்களும் தனித்தனியாக வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்ததாக பொலீசார் இவர்களை கடந்த 28ம் திகதி கைது செய்து நேற்று அதாவது கடந்த வெள்ளியன்று இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக அனுப்பியுள்ள பொலீசார் மேலதிகவிசாரணைகளை மேற்ீகாண்டுவருகின்றனர்,
சிறுமியின் நலன் கருதி தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு வயதிலேயே இச்சிறுவர்கள் இக்குற்றத்நினைப்புரிய முக்கிய காரணம் பெற்றோர்களும் நவீன சாதனங்களின் நெறிப்படுத்தப்படாத பயன்பாடுமே மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவருத்தமளிக்கக்
கூடிய விடயமாகும்.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்