சீன வைரஸால் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பீதி!
சீனாவில் பரவிய கொரோணா வைரஸ், தற்போது ஏனைய நாடுகளையும் பரவலாகத் தாக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் மாகணத்தில் வௌவால்களை உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம், அவற்றை உணவாகக் கொள்ளும் சீன மக்களுக்குப் பரவியது கொரோணா வைரஸ்.
இந்த வைரஸால் இதுவரை சீனாவில் 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆயிரத்து 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 23 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என சீன அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இவ்வைரஸ் அவுஸ்திரேலியாவில் நான்கு பேரையும் அமெரிக்காவில் இருவரையும் பிரான்ஸில் இருவரையும் தாக்கியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் இவ்வைரஸ் பரவியுள்ளது என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து நாடு திரும்பிய யுவதி ஒருவரும் சீனப் பெண் ஒருவரும் குறித்த வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், உறுதிப்படுத்தப்படவில்லை.