வுஹான் பகுதியில் இருந்து கட்டாயப் படுத்தி தூக்கிச் செல்லப் படும் மக்கள்..! அதிரும் சீனா..!! வைரலாகும் வீடியோ இதோ..!!
சீனா உட்பட சுமார் 35 நாடுகளில் பீதியை ஏற்படுத்தி இருப்பது கொரோனா வைரஸ் தான். சீனாவின் வுஹான் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. அத்துடன் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் இருந்து இன்று வரை அரசாங்கத்தின் அறிவிப்பின் படி 750 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் நேற்றைய தினம் மட்டும் 80 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப் படுத்த முடியாமல் சீனா தடுமாறி வரும் நிலையில் சீனா மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சீனாவில் கொரோனாவை கட்டுப் படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இதனை சீனா அரசு அறிவித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் வுஹான் பகுதியில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். இதனால் குடும்பத்தினர் பாதிக்கப் படுவதுடன் வீட்டிற்கு வந்து செல்வோரும் பாதிக்கப் படுகின்றனர். இதனால் நோயை கட்டுப் படுத்த முடியாமல் உள்ளது. இதனால் சீன துணை அதிபர் சன் சுன்லானின் உத்தரவிற்கு அமைய வுஹான் முழுவதும் சுகாதார தொண்டர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை நடத்துவதுடன் பாதிக்கப் பட்ட அனைவரையும் தனிமை படுத்துவதற்காக கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. வுஹானில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் பாதிக்கு மேட்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்ற நிலையில்..
இந்த அதிரடி செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சிலர் தவறான தகவல் வெளியிட்டு வரும் நிலையில் அதனை நம்ப வேண்டாம் என சீனா அரசு தெரிவித்துள்ளது. வீடுகளில் இருந்து பாதிக்கப் பட்ட மக்களை கட்டாயமாக அழைத்துச் செல்வது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மட்டுமே என அரசு மேலும் தெரிவித்துள்ளது..!!
Can anyone translate & explain what’s happening here? pic.twitter.com/thXsabkI9j
— Rita Panahi (@RitaPanahi) February 8, 2020