சீரியல் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை அல்ல..! வைரலாகும் கொலைக்கான அடையாளங்கள்…
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றது. சிறு வயதில் இருந்தே சாதிக்க வேண்டும் என முயன்ற சித்ராவின் ஒரே இலட்சியம் தன் தாய் தந்தையரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும். சாதாரண குடிசை வீட்டில் இருந்து தனது பயணத்தை தொடர்ந்த சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஆரம்பித்த நேரத்தில் கொடுத்த பேட்டியில் எனது கனவெல்லாம் சொந்தமாக வீடு வாங்க வேண்டும்,
அதில் என் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதே போல் இரண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த வீடு வாங்கினார். சொந்த வீட்டிற்கு சென்ற பின்னரே பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த மணமகனுக்கு சம்மதம் சொன்னார்.
தாய் தந்தையர் கவலை பட கூடாது என்று நினைத்த சித்ரா எப்படி தற்கொலை செய்து கொள்வார் என்ற கேள்வி எழ சித்ராவின் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலீஸில் புகார் அளித்துள்ளார்.
சித்ராவின் மரணம் தொடர்பாக பொலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சித் ராவின் முகம் உட்பட உடலில் சில இடங்களில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூக்கில் தொங்கியதற்கான அடையாளங்கள் , அதாவது கழுத்தில் இறுகிய அடையாளம், நாக்கில், கண்ணில் மாற்றம் போன்றவை சரியாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
மருத்துவ அறிக்கை வரும் வரை கொலையா தற்கொலையா என பொலீஸாரால் உறுதிப் படுத்த முடியாத நிலையில் கொலைக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் கொலையா தற்கொலையா என பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.!!