சொந்த 3 மகள்களை 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை.! மகள்கள் எடுத்த அதிரடி முடிவு…!!
பெற்ற தந்தையை கூட இன்றைய காலத்தில் நம்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. ரஸ்யாவின் தலைநகரான மாஸ்கோவை சேர்ந்தவர் மிகைல் கச்சதுரியன். 57 வயதான இவருக்கு கிரிஸ்டினா 19 வயது, ஏஞ்சலினா 18 வயது, மரியா 17 வயது .என மூன்று பெண் பிள்ளைகள் இருந்துள்ளனர். இவரது மனைவி கடந்த 2014ம் ஆண்டு கணவர் மிகைலினால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார்.
இதற்கான காரணம் தொடர் சித்திரவதை, தகாத வார்த்தை பிரயோகம் என்பதை எதிர்த்ததால் தன்னுடன் வாழ தகுதி இல்லை என மனைவியை வெளியேற்றினார். ஆனால் இவரிடம் மூன்று பெண் பிள்ளைகளும் மாட்டிக் கொண்டனர். 2014ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அதாவது சுமார் 4 வருடங்கள் பெற்ற தந்தையால் மூன்று யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்டனர்.
தினமும் தந்தை கொடுக்கும் பாலியல் தொல்லையை அனுபவித்து வந்த இவர்கள் பொறுமையை இழந்து 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி தந்தையை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மூவரும் சுமார் முப்பது முறை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தனர். அதன் பின் தாங்கள் தங்கள் தந்தையை கொலை செய்ததாக பொலீஸாருக்கு அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து சகோதரிகள் கைது செய்யப் பட்டனர். இந்த பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ளவர்கள் குரல் எழுப்பி வந்த போதும் பொலீஸார் இவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் குறியாக இருந்தனர். இது திட்டமிட்ட கொலை என்பதை நிரூபித்தனர்.
பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே கொலை செய்தனர் என மக்கள் கூறினாலும் சட்டம் தண்டணை கொடுக்கும் என பொலீஸார் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் ஒருவருடமாக இருந்த இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதில் சகோதரிகளுக்கு சுமார் 20 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது..!