குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பின் நடிகை ரம்யா பாண்டியன் போட்ட பதிவு..! என்ன சொல்லி இருக்கார் பாருங்கள்..!!
விஜய் தொலைகாட்சியில் அனைவரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். சினிமா பிரபலங்களுடன் தொலைகாட்சி பிரபலங்களும் இணைந்து சமைத்து அசத்தியதுடன் ரசிகர்களை மகிழ்விக்கவும் செய்தார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் நீண்ட் நாட்களுக்கு பின் குடும்பத்துடன் ரசிக்க முடிந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்த போட்டியாளர் ரம்யா பாண்டியன்.
அனுபவம் உள்ள வயதில் அதிகமானவர்களுடன் போட்டியிட்டாலும் தனக்கான தனி ஸ்டைலை வைத்திருந்தார். இதனால் பைனல் வரை வந்து மூன்றாம் இடம் பிடித்தார். நிகழ்ச்சி நிறைவடைந்த பின் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் எனக்கு ஆதரவு அந்த சக போட்டியாளர்கள், கோமாளிகள், ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. பைனல் வரை வருவேன் என்று நினைக்கவில்லை, வந்து மூன்றாம் இடம் பெற்றதில் மகிழ்ச்சி நன்றி என தெரிவித்துள்ளார்…!!