திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குக் வித் கோமாளி புகழ் ரித்திகா.! சோகத்தில் ரசிகர்கள்.!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சில வாரங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ரித்திகா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகையான ரித்திகாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஆசை ஏற்பட பிரபல தொலைகாட்சியிடம் அனுமதி பெற்று சில வாரங்கள் சமைத்து அசத்தினார்.
பின்னர் சமையலில் சொதப்பி வெளியேற்றப் பட்டார். அதன் பின் மீண்டும் சீரியலில் நடிப்பை தொடர்ந்த ரித்திகா நேற்றைய தினம் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், சீக்கிரம் குணமாகி வந்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்..!