கொரோனா வைரஸை குணப்படுத்துகிறதா சுடு தண்ணீர்.? இதோ முழுமையான தகவல் உங்களுக்காக..!!
கொரோனா வைரஸால் உலகமே ஆடிப் போய் உள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் வல்லரசு நாடுகளே குழம்பிப் போய் உள்ளது. கொரோனா வைரஸுக்கான மருந்தை சில நாடுகள் கண்டுபிடித்த போதும் இன்றளவும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தியாவில் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொண்ட நிலையில் இலங்கையில் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதனால் இலங்கையை முடக்கும் நிலை வரலாம் என இலங்கை சுகாதார துறை அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் 25 மாவட்டங்களில் தற்போது 22 மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனை கட்டுப் படுத்த சுகாதார குழுவினர் முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸை குணப்படுத்தும் என கூறி வியாபாரிகள் சில பொருட்களை அநியாய விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள், குறிப்பாக பெருங்காயம், மஞ்சள், இலவங்கப்பட்டை, வசம்பு, போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப் படுகிறது. இவை கொரோனாவை அழிக்கும் என வதந்தியை பரப்பி விற்பனை செய்கின்றனர்.
இவை அனைத்தும் பொய்யென கூறியுள்ள ஆய்வாளர்கள் சுடு நீர் குடிப்பது கொரோனாவின் தாக்கத்தை குறைக்க உதவும். குணமாகிவிடுமா என கேட்டால் இல்லை தான், ஆனாலும் சுடுதண்ணீர் குடித்து வருவதால் கொரோனா வைரஸில் இருந்து ஓரளவு குணமாக முடியும். அதே போல் சிலர் பிசிஆர் பரிசோதனை செய்தால் வலிக்கும் என்பார்கள், ஆனால் இது வலிக்காது, அதனால்.பிசிஆர் பரிசோதனை செய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!!