கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு இருக்கின்றீர்களா.? அட கவலையை விடுங்க, இத மட்டும் செய்யுங்கள் கொரோனா ஓடியே போயிடும்.!!
கொரோனா வைரஸ் என்றதும் அனைவரும் பயந்து நடுங்குகிறோம், உண்மையில் கொரோனா வைரஸ் அத்தனை ஆபத்தானதா என டாக்டர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இது ஒரு சாதாரண தொற்று நோய், ஆனால் இதனை ஆபத்தாக மாற்றுவது மக்களின் செயற்பாடுகள் தான் என கூறுகின்றனர். உலகில் கொரோனாவை விட மோசமான பல நோய்களின் தாக்கம், ஆனால் கொரோனா தானாக எம்மை தேடி வருவதில்லை, நாமே அதனை தேடி செய்கிறோம்.
சரி இன்று நாம் கொரோனா வைரஸை ஓட ஓட விரட்டுவது பற்றி தெரிந்துகொள்வோம். வழமையான காய்ச்சல், சளி இருமலை விட வேறுபட்டு இவை இருந்தால் சற்று தெளிவாகுங்கள். டாக்டர் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் பற்றி கூறிவிட்டு வீட்டில் உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா இருக்கா இல்லையா என்று பார்க்கும் வரை இருக்காதீர்கள்.
அறிகுறிகள் வரும் போதே உங்களை நீங்கள் தனிமை படுத்தினால் வேறு யாருக்கும் கொரோனா பரவாது. டாக்டரின் அலோசனையின் படி உங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுப்பார்கள், அதில் உங்களுக்கு கொரோனா உறுதிப் படுத்தப் பட்டால் பயந்து நடுக்காதீர்கள். கொரோனா ஒரு தொற்று நோய் அவ்வளவு தான். அடுத்து அதில் இருந்து மீள என்ன வழி அவ்வளவு தான்.
டாக்டரின் ஆலோசனை படி வீட்டில் இருக்க முடிந்தால் உங்கள் அறையில் அழகிய உலகத்தை உருவாக்குங்கள். உங்களுக்கு பிடித்த பாடல், இசை கேளுங்கள். நன்றாக உறங்குங்கள். கொரோனா சம்மந்தப் பட்ட எதையும் பார்க்காதீர்கள். குறிப்பாக செய்தி பார்க்காதீர்கள். உங்கள் கை கால் புண் போல் வலிக்கும் அதனால் ஏதேனும் வலி நிவாரணி வைத்து பூசிக்கொள்ளுங்கள்.
மனதை குழந்தை போல் வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் அரட்டை அடியுங்கள். உறங்கும் முன்பு உங்களின் உடல் நிலை பற்றி டாக்டரிடம் பேசுங்கள். உங்கள் மனதில் வாவ் எனக்கு கிடைத்த சூப்பரான ஓய்வு நேரம் இது, இதனை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள், சீக்கிரமே குணமாகி விடுவீர்கள். வைத்தியசாலையில் இருப்பவர்களும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், அப்படி செய்தால் கொரோனா சீக்கிரமே ஓடிவிடும்.!!