“கொரோனா ஒரு கொடூரமான வைரஸ்” சிகிச்சை அளிக்கும் போது பயந்துவிட்டேன்… கொரோனா வைரஸ் பதிப்பு பற்றி முதல் முறை வெளிப்படுத்திய தாதி மிருதுளா…!!
இன்றைய நாட்களில் கடவுளை விட கையெடுத்து கும்பிட வேண்டியவர்களாக இருப்பது மருத்துவர்கள் தான். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது உலகில் சுமார் 25 நாடுகளை தற்போது தாக்கி உள்ளது. சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்த நிலையில் சுமார் 60 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சுமார் 4 ஆயிரம் பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு சிகிச்சை பார்த்த தாதியான மிர்துளா தனது அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். கொரோனா இந்தியாவில் உள்ளது என்பதை அறிந்ததும் அதிர்ந்து போனோம்.
எப்படியாவது குணப்படுத்துவது என்று முடிவெடுத்து வைத்தியர்கள், தாதிகள், உதவியாளர்கள், துப்பரவு தொழிலாளர்கள் என அனைவரும் தேர்வு செய்யப் பட்டோம். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை எங்கள் ஷிப்ட் மாற்றப் பட்டது. அத்துடன் நோயாளிக்கு போல் எங்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது.
முதலில் பயந்து போனேன், ஆனால் குணப்படுத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இது மோசமான வைரஸ் நொடியில் பரவிவிடும். இதன் தாக்கம் கொடுமையானது, அதனால் எங்கள் யாருக்கும் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லை. எல்லோருக்கும் ரூம் வைத்தியசாலையில் தான். எப்படியோ போராடி குணப் படுத்தி விட்டோம்.
இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றளவில் சீனாவில் பல மருத்துவர்கள் தாதிகள் இறந்து விட்டனர். இங்கும் நிபா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தாதி ஒருவர் அதே நோயால் மரணமடைந்த சம்பவம் உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருங்கள், என மிருதுளா மேலும் தெரிவித்துள்ளார்..!!